

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா இன்று (1-10-2019) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.இஸட். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இசை, நடனம், விளையாட்டுக்கள் உட்பட
பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஆசிரியர் எம் .ஆர். பிலீசியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை எம். நேசமலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அத்துடன் சகலமானவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.











